இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வீதியில் விபத்துக்கள் ஏற்படக் காரணங்கள் - சமூகம் குறித்த முக்கிய பதிவு

நாம் வீதியில் பயணிக்கிறோம் அப்போது பல கோர விபத்துக்களையும் எம் கண் முன்னால் பார்க்கிறோம். இந்தப் பதிவை எழுத முக்கிய காரணம் சமீபகாலமாக பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவற்றைக் கருத்திற்க் கொண்டேயாகும்.


நாம் இப்போது பதிவின் விளக்கத்தைப் பாப்போம்..

வீதி விபத்துக்கள் ஏற்படும் முக்கிய காரணங்கள்

1. மது அருந்துதல்

எத்தனையோ அப்பாவி உயிர்கள் பல கொடிய மது அருந்திகளால் தங்கள் இரத்தத்தைத் தானம் செய்கிறார்கள். குடி போதையில் கண்ணு முன்னு தெரியாமல் வண்டியை ஓட்டுகிறார்கள். இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் உங்களுக்கும் தெரியும்.

சரி இப்படியும் சொன்னால் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் "தல" சொன்ன மாதிரி

"Light ஐ போட்டு வண்டி ஒட்டு'
Light ஆக போட்டு வண்டி ஓட்டாதே..."

சரி இந்தப் பதிவை வாசிக்கும் நீங்கள் மது அருந்தியாகவிருந்தால் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்ததாக பெண்கள் roadகளில் குட்டைப் பாவாடை அணிந்து செல்வதை வாயைப் பிளந்து பார்க்கும் ஆண்கள் (ஒரு சில ஆண்கள்) . நான் ஆண்களையும் குறை சொல்ல மாட்டேன் , பெண்களையும் குறை சொல்ல மாட்டேன்...

வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கவனமாக பார்த்து வண்டி ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்பொது நான் கூறுவது எனது சொந்த அனுபவம் ...

நீங்கள் motor cycle ஓடும் போது எதிரில் வருபவர் முன் உங்கள் headlight ஐ சற்று டிம் பண்ணுங்க... அப்பிடி டிம் பண்ணாம வந்த ஒருத்தரோட நான் மோதியிருக்கேன் நல்ல வேளை இப்போ உயிரோட இருக்கேன்... so நான் சொன்னது விளங்கியிருக்கும்......

அடுத்து வீதி ஒழுங்குகளை பேணி பாதையில் இருக்கும் சமிஞ்ஞை விளக்குகளைக் கருத்திட் கொண்டு உங்கள் வாகன சாகசங்களை தொடர்ந்து மேட்கொள்ளுமாறு கூறி பதிவை நிறைவு செய்கிறேன்.

குறிப்பு: இதில் இருக்கும் காரணங்கள் மட்டுமல்ல இவை எனக்கு தெரிந்த ஒரு சில காரங்கலாகும். உங்களுக்குத் தெரிந்த காரணிகளை கீழே comment பெட்டியில் இடவும்..

நன்றி
பரதன்

2 கருத்துகள்: