இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டியவை

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்பமாட்டார்கள். இருந்தபோதிலும், அவர்களுடன் நேரடியாடவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும்.


இவ்வாறு பேசுவதன் மூலம் , அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திய விடயம் எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில முக்கியமான சில விடயங்கள் மிகவும் முக்கியமானவை...

அவையாவன.

1. குழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு எளிது, ஆனால் செயற்படுத்துவது கடினம்

2. அவர்கள் மனதில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, ' எனக்கு அப்போதே தெரியும்' என்பது, 'அதுதான் நீ எப்போதும் செய்யும் தப்பு' என்பது, 'சரியான முட்டாள் நீ' என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக் கூடாது.

3. அவர்கள் நினைப்பதைஅவர்கள் சொந்த வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.அவர்கள் கூறி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக்கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சொல்லும் விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள அவ்வப்போது சிறு கேள்விகளை கேட்கலாம் ஆனால், அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, என்னத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கூறி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

"நான் உன்னை ஒரு வாரமாக கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய்" என்று சொல்ல வேண்டாம். இவ்வாறு சொல்வதன்மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள் தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

இது அனைத்தும் ஓர் மாதப் பத்திரிகயிளிருந்து பெறப்பட்டது.. உங்கள் பார்வைக்காக இதைப் பிரசுரித்தேன். நீங்களும் இதை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக