இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 டிசம்பர், 2018

2018 வருட இறுதியில் பார்த்த "எழுமின்"

இந்த படம் வந்த போது விவேக் ஹீரோ என்று மட்டும் தெரியும்... ஒரு நாள் பார்க்க வேண்டும் என்று தள்ளி தள்ளி போய் இப்போது மாதங்கள் ஆகி ஒரிஜினல் காப்பி நெட்டில் வந்ததும் பார்த்தேன்.

படம் என்றால் அதில் பல வகை உண்டு.
சமூக கருத்தை கூறுவது - பொழுதுபோக்குக்காக மட்டும் பார்க்க கூடிய படம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த ரீதியில் இப்படம் ஒரு சமூக கருத்தை கூறும் படம் என்ற ரீதியில் சேர்த்துக் கொள்வேன்.
படத்தின் ஆரம்பத்திலேயே சிறுவர் துஷ்பிரயோகம் எனவும் முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு "Good Habits", "Bad Habits" சொல்லிக் கொடுத்தோம்; இப்போது "Good  Touch" "Bad Touch" சொல்லி கொடுக்க வேண்டும் என பட ஆரம்பம்.

கதையை பொறுத்தவரை ஓகே காரணம் படத்தின் நீளம் 1.45 மணி நேரம். சொல்ல வந்த கருத்து இதோ படத்தின் இறுதி நிமிடங்களில் வரும் இந்த படமே போதும்
கடினமான சூழ்நிலைகள் எப்பொழுதும் கற்றுக்கொடுக்கின்றன...
எந்த சூழ்நிலையிலும் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள்
மகன் இறந்த போது விவேக், தேவயானி நடிப்பு மிகவும் அபாரம். விவேக் பல குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் இதில் "அவன் மயக்கத்திலே தான் இருக்கான் போய் எழுப்புங்க டாக்டர்" என்பார்.... மனுஷன் அளவச்சிடார்.....

இந்தப் படம் பார்த்த பின்பு தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. இலங்கையில், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு 2 மாதங்களுக்கு முன் போன போது "Dance Fight" என ஒன்று இடம்பெற்றது. அதில் இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் இருந்து டான்ஸ் மேல passion இருக்கிற பல பேரை காணக்கூடியதாக இருந்தது.

அவர்களில் சிலரை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது, அவர்களில் பலர் வசதியான வீட்டு பிள்ளைகள் கூட இல்லை. எல்லாம் அவர்களின் சொந்த ஆர்வம் தான் அவர்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது என அறிந்து கொண்டேன். வாழ்க்கையில் எதோ ஒன்றை சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறியும், தன்னம்பிக்கையும்.......

அது இருக்கும் வரை எந்த சூழ்நிலையையும் உங்களால் சமாளிக்க கூடிய சக்தியை மனது உங்களுக்கு வழங்கும்..

ஆண்களுக்கு சரி சமமாக ஆடும் பெண்கள் பலர் அங்கு காணக் கூடியதாக இருந்தமை தான் நாம் வாழும் சமூகம் கூர்ப்படைகிறது என்பதை அறிய முடிகிறது.
ஆண் குழந்தைகளுக்கு பெண்மையின் உயர்வை சொல்லி வளருங்க... பெண்களுக்கு எல்லாம் தற்காப்பு கலையை சொல்லிக் கொடுங்கள்
படத்தின் இறுதியில் விவேக் சொல்லும் செய்தி.

வரப்போகும் வருடத்தை தன்னம்பிக்கையுடனும், உட்சாகத்துடன் வரவேற்போம்....

நாளை நமதே....

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடம்

வணக்கம் நண்பர்களே.. இன்றய தினம் நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு தகவலை உங்களோடு பகிர உள்ளேன், தனிமை சிலருக்கு இனிமை, சிலருக்கு கொடுமை. அப்படியாக தனிமை படுத்தப்படட ஒரு தீவு ஒன்று தெற்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அந்த தீவின் பெயர் "ட்ரிஸ்டன் த குன்ஹா". (Tristan da Cunha)
தென் ஆப்பிரிக்காவின், கேப் டவுன் இலிருந்து கிடடதட்ட 1400 மைல் தூரத்தில் அமைந்துள்ளது இந்த தீவு .

இந்த தீவில் கிடடத்தட்ட 300 மக்களே வசிக்கிறார்கள்.

இது மிகவும் மோசமான எரிமலை கொண்ட தீவாகும். 1961 கால கட்டத்தில் இங்கு எரிமலை குழம்பு வெடித்தது. அப்போது இங்கு மக்கள் வாழும் பிரதேசத்திட்க்கு அண்ணளவாக 10 மீட்டர் தொலைவில் தான் அந்த எரிமலை குழம்பு வெளியேறுவது நின்றதாம்.

மக்கள் அனைவரும் இதனால் இங்கிலாந்து போன்ற சில இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றாலும்; மீண்டும் தாம் வாழ்ந்த இடம் என்ற அன்பின் காரணமாக இங்கேயே வந்து விடடனராம். இன்றும் அந்த எரிமலை உயிர்ப்போடு தான் உள்ளது.
இங்கு வாள்பவர்களுக்கு பிரித்தானியாவின் குடியுரிமை வழங்கப்படுள்ளது முக்கியமான அம்சமாகும்.
இவர்களின் பொதுவான வாழ்க்கை முறையானது உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை.

மேலும், மாடுகளை பால் உற்பத்திக்கு பயன்படுத்துகிறார்கள். இங்கு நீண்ட காலமாக வாழும் ஒருவர் தாங்கள் எல்லோரும் அண்ணன் , தம்பி போல் பழகுவதும், அதிகமான நேரங்களில் வீடுகளின் கதவுகளையோ, ஜன்னல்களையோ திறந்து விட்டு தான் இருப்பதும் என சிரித்து கொண்டு கூறுகிறார்.

இங்கு ஒரு நெட் கஃபே உள்ளது. ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் அதுவும் அதிக செலவாகுமாம். 1 தபால் பெட்டி, விவசாய துறை அலுவலகம், காவல் நிலையம் ஒன்றும் என ஒரு சொர்கத்தை பூமியில் பெரும் அனுபவத்தை பெறலாம் இந்த தீவில்....

என் வாழ்நாளில் ஒரு தடவையாவது இங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

உங்கள் மனோ நிலையை கீழே கமெண்டில் பதிவிடுங்கள்...