இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 நவம்பர், 2020

கோரா (Quora) தளம் பாவிச்சிருக்கீங்களா?

வணக்கம் நண்பர்களே, 

பல நாள் இடைவெளிக்கு பின்னர் ஒரு அட்டன்டென்ஸ். கல்லூரி படிப்புகள் நிறைய வந்து சேர்ந்து ஒட்டுமொத்தமாக ஏறி சில நாட்கள் அப்படி இப்படி என்று கழிந்து போயிற்று. கொரோனா காலங்களிலும் வீட்டில் நின்று அதிக எடையும் போட்டு பல மாற்றம். பலர் எழுதுவது பற்றி பேசும் போது நானும் பல வருடங்கள் முன்னர் ப்ளாக் வைத்திருந்தேன் என்றுவிட்டு இந்தப் பக்கம் வந்து பார்த்து விட்டுப் போவதோடு சரி. பேஸ்புக்கிலும் பெரிதான ஈடுபாடு குறைந்து விட்டது. வாட்ஸாப்லேயே நெருங்கியவர்களுடன் பேசி எல்லா வேலைகளையும் முடித்து விடும் போது பேஸ்புக் தேவையில்லை தானே. இருப்பினும் அதிகமாக இந்த ஒய்வு காலங்களில் நான் சென்ற தளம் என்றால் கோரா தான். கோரா என்பது கேள்வி, பதில் களஞ்சியம். உங்களது சந்தேகம் எந்தத்துறை சார்பில் இருந்தாலும் அங்கே சென்று கேள்விகளைக் கேட்டால் அது தொடர்பான வல்லுனரின் suggestions களை நீங்கள் பெறலாம்.

 பல மொழிகளில் தற்போது இது கிடைக்கிறது. 2018 இறுதி பகுதியில் தமிழ் மொழிக்கு இது கிடைக்கப்பெற்றது. பல நண்பர்கள், பல கண்டங்களில் இருந்தும் வெவ்வேறான பல சுவாரஸ்ய விடயங்களையும் தரவுப் பரிமாற்றங்களையும் மேற்கொள்கிறார்கள். ஒரு நகைச்சுவையான விடயம் என்னவென்றால் இந்த தமிழ் கோரா/ ஆங்கில கோரவில் இருந்து copy, paste செய்து பேஸ்புக்கில் போட்டு லைக் வாங்கும் அன்பர்களும் இருக்கிறார்கள்.

உங்களது பொன்னான நேரத்தை இந்தத் தளத்தில் செலவிட ஆரம்பித்தீர்கள் என்றால் எதோ ஒரு நாளில் உங்களுக்கு இவ் வாசிப்பு அனுபவம் உதவும்என்பது என் நம்பிக்கை.

https://www.quora.com/

https://ta.quora.com/ - தமிழுக்கு

வியாழன், 9 ஏப்ரல், 2020

மஹாகவியின் "ஆறில் ஒரு பங்கு"

எல்லோரையும் கொரோனா காரணமாக தனித்திருக்க சொல்லிவிட்டதானால் வீட்டில் காலையில் எழுந்து, வழமையான வேலைகளை செய்துவிட்டு கல்லூரிப் பாடங்கள் படிப்பது, பாட்டுக் கேட்பது என்று முதல் 4 நாள்கள் சென்றன.

"ஆறில் ஒரு பங்கு" எனத் தலைப்பிடப்பட்டு ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதி என ஒரு சிறுகதைப் புத்தகம் என் கண்ணில் பட்டது. புத்தகத்தின் நிலையை பார்த்தால் பல ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று நினைத்தேன். நெடுங்காலமாக பூட்டப்பட்டிருந்த நூலகம் ஒன்றில் இருந்து எடுத்து வந்திருந்தேன். காரணம் அது மஹாகவி பாரதியார் புத்தகம். இப் புத்தகம் 1910-1911 வாக்கில் வெளி வந்ததாகவும் அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஆக்கம் எனவும் அது பின்னர் 1980 களில் மீண்டும் வெளிவந்ததாகவும் தான் அறிந்ததாக நண்பர் ஒருவருடன் WhatsApp ல் உரையாடும் போது சொல்லியிருந்தார்.

அதை பற்றிய சிந்தனைகளுடன் புத்தகத்தை வாசிப்போம் என முடிவு செய்தேன். அதை ஏன் தடை செய்ய வேண்டும்? என்ன கதைக் கருவாக இருக்கும் என்ற ஆவலுடன் ஆரம்பித்தேன்.


கதையின் நாயகன் கோவிந்தராஜனின் புரசைவாக்கத்தில் உள்ள வீட்டுக்கு கல்வி கற்பதற்காக தஞ்சாவூரிலிருந்து வரும் மாமன் மகள் மீனம்பாளுக்கும் இடையிலான காதல் கதை. சுதந்திர தாகத்தால் காதலை வேண்டாம் என்று மறுக்கும் நாயகன் (அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற அன்றய / இன்றய சமூக நிலையை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கம் என்று கூட சொல்லலாம்), நாயகனைப் பிரிய மனமில்லாமல் கல்யாண தினத்தன்று அவள் கனவில் தேவி (சரியாக எந்த தேவி என்று ஞாபகம் இல்லை - ஒரு பெண் கடவுள்) தோன்றி அவளின் வீட்டின் ஒரு மூலையில் இருக்கும் இலைகளை அரைத்துக்குடி என்று கூறியதாகக் கூறி நாயகனுக்கு கடிதம் எழுதி தற்கொலை செய்கிறாள். பின்னர், 2 வருடங்கள் கழித்து கல்கத்தா செல்லும் கோவிந்தராஜனுக்கு மீனம்பாள் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறாள் என்று தெரிய வந்து, மேகத்தினிடையே மறைந்திருந்த சந்திரனைப் போல காதல் மீண்டும் துளிர்க்க அவளைக் காண காசி செல்கிறார். இறுதியில் இருவரும் இணைந்தனரா என்பது தான் கதை.

ஒரு வேளை இந்தக் கதை தடை செய்யப்படக் காரணம் பாரதி எழுதிய சில உண்மையான எதார்த்தமான எடுத்துக் காட்டுகளாகக் கூட இருக்கலாம்.

“பாரத தேசத்தார் அனைவரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திகளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள் என்பது முதலான ஆங்கிலேய சத்தியங்கள் எல்லாம் என் உள்ளத்திலே குடிபுகுந்துவிட்டன. ஆனால், கிறிஸ்துவப் பாதிரி ஓர் வினோதமான ஜந்து, ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரீகத்திலும் பக்தி செலுத்துவது பேதமை என்று ருஜூப்படுத்திக்கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்துவிடுகிறார். மத விஷயங்களைப் பற்றி விஸ்தாரமான விவகாரங்கள் எழுதி, படிப்பவர்களுக்கு நான் தலைநோவு உண்டாக்கப்போவதில்லை. சுருக்கம் நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி, ‘ஞான ஸ்னானம்’ பெறவில்லை; பிரம்ம ஸ்மாஜத்திலே சேர்ந்து கொண்டேன்”
மத மாற்றம் இன்று, நேற்றல்ல ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது என்பதை பாரதி தன் எழுத்துக்களால் எடுத்தியம்பியுள்ளார். இதை விடவும், ஹிந்து மதத்துக்குள் தாழ் சாதியினர் என்ற பாகுபாடு காட்டப்பட்டு ஒதுக்கப்படுவது மத மாற்ற சபையினருக்கு மேலதிக உற்சாகத்தை தருகிறது.
"நம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?”
கதையின், தலைப்பு இங்கே தான் நமக்கு தெளிவாக விளங்குகிறது. நாயகன், நாயகி இருவருக்குமே ஒரே மன இயல்பு சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை அழிக்க வேண்டும். சுதந்திரக் காற்று பாரதத்தில் வீச வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்கள்.

மேலும், ஒரு சில வாசிப்புக்களின் மூலமாக தமிழில் வெளி வந்த முதல் சிறுகதை எனக் கூட இதை எடுக்கலாம் என வாசித்திருக்கிறேன். காரணம், 1911 களில் இது வெளிவந்திருக்கிறது. இந்தக் கதையை நிச்சயமாக ஒரு நாவலாகக் கூட எழுதலாம். அனால், பாரதி அதை சுருக்கமாக சொல்லி முடித்திருக்கிறார்.

இக் கதையினூடாக பாரதி தான் விரும்பும் சில விடயங்களை கூற முனைந்திருப்பர் என எண்ணுகிறேன்.
சமூக ஏற்றத் தாழ்வுகள் குறையும் போது தான் நாம் எதையும் சாதிக்க முடியும், இல்லையேல் நாம் அழிவது உறுதி.

இரவில் தனிமையில் நாயகனும், நாயகியும் சந்திக்கும் காட்சியை விபரிப்பார்; உண்மையில் அக் கால கட்டத்தில் நடக்க முடியுமா என்பது சந்தேகம் தான். எப்படியெல்லாம் பெண்கள் இருக்க வேண்டும் என்பதை மீனம்பாள் என்ற கதாப்பாத்திரத்தினூடு சொல்லிச் சென்றிருக்கிறார் பாரதி.
தைரியம், துணிச்சல் மிகுந்த பெண், எண்ணியது துணிதல் என ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் எதோ ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என எண்ணிச் சென்ற அந்த முண்டாசுக் கவிஞனை இன்று எத்தனை பேர் ஆர்த்மார்த்தமாக நினைக்கிறார்கள்.

பாரதி கவிதைகள் என்றால் சமூக வலைத்தளங்களில் ஒரு சின்ன கேலியாவது இருப்பதைப் பார்க்க முடிகிறது. நான் கல்வி கற்ற இலங்கையில் உள்ள யாழ்பாணக் கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் பாரதி பிறந்த நாளுக்கு பாரதி தினம் என செப்டெம்பர் மாதம் கொண்டாடுகிறார்கள். இத்தனைக்கும் அது அமெரிக்கன் மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவப் பாடசாலை.

இன்னும் பாரதியை வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. பாப்போம்..

நன்றி,
அன்புடன்,
பரதன்.

மேலும் சில வாசிப்புகளுக்கு:
ஆறில் ஒரு பங்கு - சுப்பிரமணிய பாரதியார் (ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட நூல்)

எழுத்தாளர் ஜெயமோகன் இச் சிறுகதை பற்றி எழுதிய கட்டுரை

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தினமும் அரைமணி நேரம் உங்கள் குரலை தமிழுக்கு தந்துதவுங்கள்.......!

நன்றி கூகிள்

UNESCO அழிந்து வரும் மொழிகளில் தமிழை 8 வது இடத்தில் படியியலிட்டுள்ளதாக அண்மையில் முகநூல் பதிவொன்றில் படித்தேன். இது உண்மையற்ற ஒரு பதிவு என்பது கூடத்தெரியாமல் பலர் மேடைகளில் பேசித்தள்ளுகிறார்கள் என்பதுதான் மிகக் கவலைக்குரிய விடயம்.

ஆனால், எதிர்காலத்தில் அழிய வாய்ப்புக்கள் உண்டு என்பதும் ஒரு அச்சத்திற்குரிய விடயம் அல்லவா...?. 
எனவே. நம் மொழியை முடிந்தவரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

சரி, சொல்ல வந்த விஷயத்தை சுருக்க சொல்லி விடுகிறேன்.
Google, Facebook, Apple என முன்னனி நிறுவனங்களும் தங்கள் சேவையை பல மொழிகளில் விஸ்தரித்து விட்டன. அதேநேரம், தமிழ் மொழியின் பயன்பாடும்  இணையத்தளத்தில் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.

நீங்கள் அறிந்திருப்பீர்கள் Google Speech -To -Text எனப்படும் ஒரு சேவை உள்ளது. நீங்கள் உங்கள் வாயால் சொல்லச் சொல்ல அது தானாக எழுத்து வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ளும். ஆனால் இந்த சேவை ஒரு வரையறுக்கப்பட்ட சேவையாகும். அதாவது, இந்த சேவையினை நாம் பயன்படுத்திக்கொள்ள இலவசமாக விடப்பட்டுள்ளது அதையே நாம் பிற எமது தேவைகளுக்கு பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த பிரச்சனையை புரிந்து கொண்ட சிலர் ஒன்றிணைந்து Open Source (திறந்த வெளி) மென்பொருள் சேவையை உருவாக்கியுள்ளனர். Mozilla நிறுவனத்தின் Common Voice என்ற செயற்திட்டம் மூலம் இந்த சேவையினை இலவசமாக பெற்று செயற்படுத்திக் கொள்ளலாம். 
இந்த செயற்றிட்டம் முழுக்க முழுக்க திறந்த வெளி அதாவது யாருக்கும் எப்போதும் எந்த தங்குதடைகளும் இன்றி பெற்றுக்கொள்ளக் கூடிய சேவை.

இதற்கு, முதற்கட்டமாக பல தரவுகள் தேவைப்படுகின்றன. இந்த செயர்த்திட்டத்தில் Machine Learning, Deep Learning எனப்படும் தொழிநுட்பங்கள்பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிறு பிள்ளை எப்படி சிறுபராயத்திலிருந்து அதன் சுற்று சூழலை கவனித்து அதன் மூலம் கற்றுணர்ந்து பெரிய மனிதர் ஆகிறதோ அதுபோலக் கணணிகளுக்கும் நாம் கற்பிக்க வேண்டும்.

எவ்வளவு தரவுகளை கணனிக்கு புகட்டுகிறோமோ அவ்வளவு தூரத்திற்கு துல்லியமான முறையில் கணனி முடிவுகளை எடுக்கும் திறனைப் பெறும்.
இந்த செயற்திடடத்தைப் பொறுத்தவரையில் உங்கள் ஒவ்வொருவரதும் பங்களிப்பு மிக மிக அவசியம் தேவைப்படுகிறது.

https://voice.mozilla.org/ என்ற இந்த தளத்திற்கு சென்று உங்கள் கணக்கினை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

கணக்கை உருவாக்கும் விடயங்களை கீழ்வரும் படங்கள் மூலம் பார்க்கவும்.

பின் தோன்றும் திரையில் உங்கள் GMAIL கணக்கை பயன்படுத்தி இங்கு கணக்கை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் மின்னஞ்சல் கணக்கினை சொடுக்கவும்.

அடுத்த திரை இவ்வாறு தோன்றும்.....



பின்னர் தோன்றும் திரையில் உங்கள் username ஐ கொடுத்து உங்கள் வயது எல்லையை கொடுத்துவிடுங்கள். உங்களால் பதிவு செய்யப்படும் குரல்கள் உங்கள் பெயரில், உங்கள் வயதெல்லையுடன் சேமித்து வைக்கப்படும்.

இனி save செய்து கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் கணணித்திரையின் வலதுபக்க மேல் மூலையில் மொழித்தெரிவில் தமிழைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.


பின் தோன்றும் திரையில் இடது பக்க மேல் மூலையில் "பங்களி" என்பதை அழுத்தவும்.


இப்போது நீங்கள் 2 விடயங்கள் மூலம் பங்களிக்கலாம்.

1. திரையில் தோன்றும் வசனங்களை வாசித்து அதனை பதிவு செய்யலாம்


Mic ன் படத்திற்கு மேல் சொடுக்கிவிட்டு தரப்பட்ட வாக்கியத்தை வாசிக்கவும். வாசித்தவுடன் மீண்டும் அதை சொடுக்க வேண்டும். வலது பக்க கரையில் நீங்கள் பேசியவற்றை மீண்டும் கேட்க்க முடியும். அதில் ஏதாவது பிழை இருப்பின் மீண்டும் பதிவு செய்து கொள்ள முடியும்.


2. "கவனி" என்பதை சொடுக்கினால் உங்களை போன்று பிறர் பதிவு செய்த ஒலி களை கேட்டு அவை திருப்திகரமானதாக இருப்பின் அவற்றை ஆம் என்றும் இல்லை என்றும் தெரிவு செய்யுங்கள்.


இது மிகவும் சுலபமாக இருப்பினும் உங்களது பொன்னான நேரம் என்பது மிக முக்கியமானதாகும். இதை ஒரு பொழுதுபோக்காக எடுத்து தினமும் ஒரு அரைமணிநேரம் முயற்சித்து செய்து வந்தால் தமிழை மேலும் விரிவடையச் செய்யலாம்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து தரவுகளும் https://voice.mozilla.org/en/datasets இந்த தளத்தில் சென்று பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆனால், இன்னும் தமிழ் மொழியை தரவிறக்குவதற்கு போதுமான அளவு தரவுகள் கிடைக்கவில்லை. கூடிய விரைவில் தமிழை கொண்டு வருவதற்கு பலரும் தங்கள் நேரத்தை ஒதுக்கி உதவி வருகிறார்கள்.

உங்கள் பங்களிப்பையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
பரதன்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

Dual Boot சேவை என்றால் என்ன.?? அதை எப்படி Disable செய்வது...

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய பதிவில் "Dual Boot சேவையை எப்படி Disable செய்வது" பற்றியாகும்.

ஒரு சிலர் தமது கணனியில் இரண்டு Operating System இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்பி OS ஐ install செய்வார்கள்.

இரண்டு OS நிறுவப்பட்டிருக்கும் முறைக்குப் பெயர் தான்  Dual Boot ஆகும்..

Install செய்த பின் நாம் எப்போதெல்லாம் கணணியை start செய்தாலும் இரண்டு OS ம் வந்து நிற்கும். அதில் எமக்கு பிடித்த OS ஐ Click செய்தால் சரி..



அவ் OS ஐ அழிப்பதற்கு அந்த OS எந்த Driveல் save செய்து வைத்திருந்தோமோ.. அதை அழித்தால் OS அழிந்துவிடும். ஆனால் அழித்த பிறகும் இரண்டு OS ம் கணணியை Start செய்யும்போது முன்பு இருந்தது போல இரண்டு OS ம் வரும்..

அப்படியானால்.. என்ன செய்வது...

My Computer ன் Properties ஐ Open செய்யுங்கள்..


பின்னர் advanced system settings  ஐ click செய்யுங்கள்..

இனி கீழுள்ள படத்தின் மூலம் பார்க்கவும்...



என்னங்க... விளங்கியிருக்குமென நம்புகிறேன்...!!

நன்றி//.. வணக்கம்...

2013 ஆம் ஆண்டின் சிறந்த 5 Tablet PC's

iPad ஆனது உத்தியோகபூர்வமாக 2௦1௦ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்குள் பல விதமான மாற்றங்களுடன் அதாவது சேமிக்கும் கொள்ளளவு, பிரித்தறியும் தன்மை போன்றனவற்றுடன் தட்போதயான வெளிவருகின்றன. அந்தவகையில் பலருக்கும் எது சிறந்த Tablet PC என்பது மிகப் பெரிய சந்தேகமாக இருக்கும்.

அதை தெளிவுபடுத்துவதற்காக நான் பாவனை செய்த அளவில் எது சிறந்தவை என்பதை இன்றைய பதிவில் நான் உங்களுடன் பகிரப்போகிறேன்.

இறங்கு வரிசையிலிருந்து செல்வோம் வாங்க..

5.Kindle Fire HDX

Amazon நிறுவனத்தின் புத்தம் புதிய வெளியீடாக இவ் Tablet காணப்படுகிறது. இதன் முந்தய model Tablet "Kindle Fire HD" ஆகும்.இது கிட்டத்தட்ட US$229 / £199 பெறுமதி மிக்கனவாகும். இவை தான் எனது பட்டியலில் குறைந்த விலை உள்ளனவாகக் காணப்படுகின்றன. ஆனால் இதன் டிசைன், வேலை செய்யும் திறன் என்பன சிறந்தவை.

இதன் display கிட்டத்தட்ட 7 inch ஆகக் காணப்படும். இதன் Resolution 1920 x 1200p ஆகும்.2.2GHz quad-core processor உம் 2GB RAM உம் கொண்டு நவீன கேம்களை விளையாடவும், வீடியோக்களை சேமிக்கவும் , பல தரப்பட்ட வேலைகளை செய்யவும் ஏற்ற வகையில் அமையப் பெற்றது.

இதன் எடை கிட்டத்தட்ட 0.67 pounds (303 grams) ஆகும். இந்த Tablet ன் எடை இதற்கு முதல் வந்த model Kindle Fire HD யை விட எடை குறைந்தது என்பது ஓர் சிறப்பம்சம்.  இத்தகைய பெருமைகளுடன்வரும் இவ் Tablet ஆனது இனி வரும் காலத்தில் இதன் rear-facing camera வை இல்லது தயாரிப்பது நல்லது. இந்த கேமராவை பல வாடிக்கையாளர்கள் விரும்புவது இல்லை.

Rear-facing camera என்பது கையடக்கத்தொலைபேசிக்கு பின்னால் இருக்கும் Normal camera வாகும்.

மொத்தத்தில் நீங்கள் ஒரு Tablet வாங்க நினைத்தால் இந்த Tablet ஐ வாங்கலாம் காரணம் இதன் வேகம், நம்பகத்தன்மை, மற்றும் கையாளுவது சுலபம்..

உங்கள் வாசிப்புக்கு நான் எழுதிய.. Android Tablet க்கும் Windows Tablet க்கும் இடையிலான வித்தியாசம்

4. Google Nexus 7

இதுவும் Kindle Fire HDX போன்றது தான்.. கூகிளின் 7 inch Tablet ன் update செய்யப்பட்ட model தான் இது. இது சற்று Kindle Fire HDX ஐ விட slow ஆகத்தான் வேலை செய்வது போல அமைக்கப்பட்ட Tablet.

அதாவது.., 

1.5GHz quad-core processor உம்  2GB RAM கொண்டு அதன் smooth ஆன IPS திரையில் ( IPS என்பது :- In-plane switching இது பொதுவாக LCD திரைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தொழிநுட்பம்.) 7 inch திரையும், 1920×1200 Resolution என வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் எடை  0.64 pounds (290 grams) தான்.. எங்கும் கொண்டு செல்லலாம், மேலும், எந்த பைகளிட்குள்ளும் பொருந்தும் தன்மை கொண்டது. இதன் விலையானது US$229 / £179 இலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் முந்தய model ஐ விட இது விலை கூடியதாகக் காணப்படுகிறது.

கூகிளின் Flagship Tablet தான் Android அனுபவத்தைப் பெற சிறந்ததாக அமைந்தது. Android ரசிகர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்ட படைப்பு அந்த Tablet. நீங்கள் அதை பாவனை செய்யவில்லை என்றால் இதோ Nexus 7 மூலம் Android பற்றிய முழு அனுபவத்தையும் பெறலாம். Android உலகத்தினுள் ஒரு பிரவேசம்...

உங்களுக்குத் தெரியுமா..?? Android இயங்குதளமானது கூகிளின் படைப்பாகும்.. அது பற்றி அறிய இந்தப் பதிவை வாசியுங்கள்...

3.iPad Mini With Retina Display

இதன் Display Nexus 7 ன் Display ல் இருக்கும் IPS போல இங்கே Retina Display பாவிக்கப்படுகிறது. அதாவது இந்த Retina Display யானது Apple நிறுவனத்தால் கையாளப்படும் ஒரு வகை Display.

இதன் திரை 7.9. inch ஆகவும், இதன் Resolution 2048×1536 , இதன் பழைய model ன் டிசைன் ரீதியாக இதில் பெரிதாக ஒரு மாற்றமும் இல்லை. முக்கியமான மாற்றம் என்றால் இதன் தடிப்புத் தன்மை 4.1% பழைய model ஐ விட அதிகமாக இருக்கிறது.

7.5% எடையில் அதிகரித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் இதன் மேம்படுத்தப்பட்ட Display யால் ஆகும்.

இதன் processor 64-bit A7 , இதற்குக் co-processor 1.3GHz and M7 இப்படியான set-up iPhone 5s இலும் உள்ளது. இது இதன் போட்டி நிறுவனங்களின் உற்பத்தியை விட slow ஆகத் தான் வேலை செய்யும் தன்மை கொண்டது.

இதன் விலை கிட்டத்தட்ட US$399 / £319 ஆகும்.இதன் முந்தய model ன் விலை US$70.

உங்களுக்கு iOS இயங்குதளம் பிடித்திருக்கும் என்றால் இந்த Tablet ஐ வாங்குவது சிறந்தது.

2.Sony Xperia Tablet Z

Sony நிறுவனத்தின் புத்தம் புதிய Smart Phone, : பல Smart Phone விரும்பிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. அதே Smart Phone முறையைப் பயன்படுத்தி Tablet தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது Sony நிறுவனம்.

இந்த Tablet ஆனது நல்ல பளபளப்பான மென்மையான மேற்பாகத்தைக் கொண்டுள்ளது. இது மெல்லியதும், எடை குறைந்ததுமாகக் காணப்படுகிறது. 

இது அதிக Resolution உம், 1௦.1 inch Display ஐயும் கொண்டுள்ளது. இது தான் எனது இந்த Tablet list ல் பெரிய அளவிலான Display ஐ கொண்ட Tablet.
மேலும் இதன் முன் பகுதியில் 1080p front-facing camera வையும் 8.1-megapixel கேமராவாகும்.

இது Water Proof Tablet ஆகும். இது உங்கள் மனதை உட்சாகப்படுத்தக் கூடியது. இதை விட்டுப் பிரிய உங்களுக்கு மனமே வராது. நீங்கள் Android ரசிகராயின் இந்த Tablet நிச்சயம் சிறந்த ஒன்று.

இதன் விலை கிட்டத்தட்ட  US$419 / £319

1.iPad Air

சரி, இப்போது எனது பதிவின் இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறோம். அதாவது 2௦13 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த Tablet PC யாக iPad Air தான் காணப்படுகிறது. அதாவது, பல தொழிநுட்ப வல்லுனர்களும் இவ் Tablet ஐ தான் பெரிதும் விரும்புகிறார்கள். 

இதன் டிசைன் நன்றாக இருக்கிறது. iPad Mini யின் தன்மைகள் பல இதிலும் இருக்கிறது. இது 1 pound எடை கொண்டது. இது 9.7-inch Display ஆகும்.. இதன் Processor ஆப்பிள் நிறுவனத்தின் A7 , 1.4GHz  ஆகும்

இதன் விலை கிட்டத்தட்ட US$499 / £399 . இந்த Tablet ஐ பொறுத்தவரை "எடை, சக்தி, apps டவுன்லோட் செய்யப்பட்டவை" என மொத்தமாகப் பார்க்கும் போது இதற்குப் போட்டியாக எந்த Tablet உமே இன்னும் இல்லை...

பதிவு உதவியானதாக அமைந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Google Chrome browser ஐ password கொடுத்து பாவனை செய்வது எப்படி..??

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் கூகிள் chrome இனைய உலாவிக்கு password போட்டு பாவிப்பது எப்படி என்ற trick ஐ கூற இருக்கிறேன்.

இன்றைய உலகில் இணையத்தின் பாவனையானது அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் நாம் தேடிய website கள் save செய்யப்பட்ட password கள் என்பன எமது கணணி உலாவியில் save செய்யப்பட்டிருக்கும்.

நீங்கள் ஒருவர் தான் அவ் browser ஐ பாவிக்கிறீர்கள் என்றால் பிரச்சினை இல்லை. பல பேர் பார்ப்பது என்றால் நீங்கள் அதனைத் தடுக்க முயல வேண்டும். அப்படியானால் மட்டுமே உங்கள் தகவல், தரவுகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால், browser களுக்கு password போடுவது என ஒரு option ம் இல்லை.

ஆனால் Google Chrome browser ற்கு pasword போட்டுப் பாதுகாப்பதற்க்கு ChromePW என்ற ஒரு Extension இருக்கிறது. இதனை உங்கள் கணனியில் நிறுவ வேண்டும்.

Ok ஐ Click செய்யுங்கள்...
படத்திலுள்ள வாறு Tick செய்து காணப்பட்டால் nextclick செய்யவும்.


அடுத்து உங்கள் OS ( Operating System) ஐ சரியானவாறு select செய்து 

".....Multiple users are using Google Chrome"
என்பதை click செய்து Next ஐ கொடுங்கள்..

பின் தோன்றும் விண்டோவில் இடது பக்க மேல் மூலையில்  இவ்வாறு தோன்றும்.. அதில் உங்கள் password ஐ கொடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் கீழுள்ள படத்தைப் போல 

Auto Lock , Security Mode என்பவற்றை சரி செய்துகொள்ளுங்கள்.

மேலும், இந்த Extension மூலம் website களையும் block செய்யலாம்.

இதைப் பயன்படுத்துவதால் உங்கள் கணணி இணையப் பாவனைகளைப் பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு பிரச்சினை உள்ளது. வேறு யாராவது browser ஐ பாவனை செய்யக் கொடுத்து அவர்கள் சில வேளைகளில் அந்த ExtensionUninstal செய்து விடுவார்கள். அதைத் தவிர்த்துக்கொள்ள தொடக்கத்திலேயே advanced security என்ற optionclick செய்து அது சொல்லும்படி நடந்து கொள்ளுங்கள்...

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆங்கில இலக்கணம் கற்கலாம் வாங்க - Verb - Past Tense

ஆங்கில மொழி பரந்துபட்ட சர்வதேச மொழியாகும். உலகில் எப்பாகத்திலும் உள்ள மக்களுடன் தொடர்பினை ஏட்படுத்த பெரிதும் உதவுகிறது.
நிகழ்வுகளை விபரிக்க நாம் 3 காலங்களை கொண்டிருக்கிறோம். அவை இறந்த காலம், நிகழ் காலம் , எதிர்காலம். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மேலும் 4 உப பிரிவுகளாகி 12 காலங்களை கொண்டிருக்கும். அவற்றில் இன்று இறந்த காலத்தை விபரிக்கும் இலக்கண விதிகளையும் சில உதாரணங்களையும் பார்க்கலாம்


Past Simple

Past Simple tense ஐ Preterite tense எனவும் அழைக்கப்படும்.

இறந்த காலத்தில் நடந்ததை விபரிக்க பல வழிகள் இருந்தாலும் அதிகம் பயன்படுத்தப்படுவதும் சுலபமானதும் Past Simple tense ஆகும்.
Past Simple tense வசனத்தை பின்வருமாறு அமைக்கலாம் 

subject + Past Simple 

உதாரணமாக:-

I went to school
You worked very hard

மேல் உள்ளது நேர் வாக்கியம் (Positive Sentence) எனப்படும். 

எதிர்மறை வாக்கியம்(negative sentence) ஒன்றை அமைக்கும் போது do ன் இறந்த காலமாகிய did ஐ சேர்க்க வேண்டும்  

I did not go to school

இருப்பினும், ஒரு விடயத்தை அழுத்தி, தீர்க்கமானதாக தெரிவிக்க சில இடங்களில் நேர் வாக்கியங்களில் did பாவிக்கப்படும் 

After drinking it I did, in fact, feel better.
அதை குடித்த பின்னர் உண்மையாகவே நல்லதாக உணர்கிறேன். 

இறந்த காலத்தில் நடைபெற்ற குறுகிய அல்லது நீண்ட சம்பவத்தை விபரிக்க இது பாவிக்கப்படும்.

குறுகிய சம்பவங்களை விபரிக்கும் வாக்கியங்களை உதாரணங்கள் சில 
  1. She went to the door.
  2. We did not hear the telephone.
நீண்ட நிகழ்வுகளுக்கு சில உதாரணங்கள் 
  1. I lived in Bangkok for 10 years.
  2. We did not sing at the concert since 2004.
எப்போதெல்லாம் Past tense ஐ பாவிக்கலாம் 

விவரிக்கப்படும் நிகழ்வு
  • முடிந்த ஒன்றாக இருத்தல்
  • இறந்த காலத்தில் நடந்த ஒன்றாக இருத்தல்
  • ஒரு நிகழ்ச்சி ஒன்றின் இடம், நேரம் என்பவற்றை அழைப்பிதழ்களில் குறிப்பிடும் போதோ அல்லது அதை பற்றி யாருக்கும் தெரிவிக்கும் போது
  1. He didn't like the movie.
  2. What did you eat for dinner?
  3. John drove to London on Monday.
  4. Mary did not go to work yesterday.
  5. Did you play tennis last week?
  6. I was at work yesterday.
  • ஒரு கதை கூறும் போது 
ஒரு கதையை சொல்ல ஆரம்பிக்கும் போது அந்த காட்சிக்குள் கொண்டு செல்வதட்காக தொடங்கும் போது Past Continous ல் ஆரம்பித்து, பின்னர் வரும் செயல்களை விபரிக்க Simple Past ஐ பயன்படுத்துவோம்.

The people were singing & dancing at the party.
(இந்த வசனம் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது Past Continuous ஆக ஆரம்பித்து இனி வரும் வாக்கியங்கள் யாவும் Simple Past ல் காணப்படும்). 
The policemen entered the bar suddenly. They searched for Raja. They found him immediately under the table & arrested him.


Past Perfect

Past Perfect மிகவும் இலகுவானதொன்றாகும். இது இறந்த காலத்தை பற்றி இறந்த காலத்திலேயே விபரிக்க பயன்படுகிறது.

have ன் இறந்த காலமாகிய had ஐ இணைத்து past pariciple வினை சொல்லை சேர்த்து Past Perfect உருவாக்கப்படும்.

had + [past participle]

Eg :-
I had finished my work
  • இறந்த காலத்தில் இடம்பெற்ற 2 நிகழ்வுகள் பற்றி குறிப்பிடப்படும். அதில் ஒரு நிகழ்வு மற்றைய நிகழ்வுக்கு முன்னர் உறுதியாகவும், முழுமையாகவும் நடந்து முடிந்த ஒன்றாக இருக்கும்.
உதாரணமாக :
நான் ஒரு புகையிரதத்தை பிடிக்க சென்றேன் , நான் போவதட்கு முன்பே புகையிரதம் சென்று விட்டது
இதனை புகையிரத நிலைய பொறுப்பதிகாரி  (Station Master) "நீங்கள் தாமதமாக வந்துவிட்டிர்கள்.. புகையிரதம் புறப்பட்டு விட்டது " என கூறுவார்

"You are too late. The train has left."

இதனை நான் எனது ஒரு நண்பருக்கு கூறும் போது  Past Perfect ஐ பயன்படுத்தி பின்வருமாறு சொல்லுவேன் .

When I arrived, the train had left.

இங்கு எல்லாமே இறந்த காலத்தையே மையமாகக் கொண்டு வரும்.

  • பொதுவாக Past Perfect ஐ Reported Speech ல் பயன்படுத்தப்படும்
Reported Speech என்பது நாம் கேள்விப்பட்ட ஒன்றை  அல்லது பார்த்த ஒன்றை இன்னொருவருக்கு தெரிவிப்பதாகும்.

என்னை பார்த்து ஒரு பெண் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னது என வையுங்களேன். அதை ஆங்கிலத்தில்

She said "I love you"

இங்கு ஒருவர சொன்ன வாக்கியத்தை இரட்டை மேட்கொள் குறிக்குள் எழுதுவோம்.
இதையே நான் என் நண்பனுக்கு தெரிவிக்கும் போது

அவள் எனக்கு சொன்னாள் என்னை அவள் காதலிப்பதாக  - 
She said that she loved me

Past Perfect எங்கே பாவிக்க கூடாது ?
ஒரு தொடரான சம்பவத்தை நீங்கள் குறிப்பிடாத பட்சத்தில் Past Perfect  பயன்படுத்த தேவை இல்லை.

உதாரணமாக

I had cleaned it off the door.

கதவிலிருந்து அதை நான் சுத்தம் செய்தேன்.

இவ்வாக்கியமானது எந்த விதமான Past Perfect க்குரிய உணர்வையும் ஏட்படுத்தாது. காரணம் சுத்தம் செய்வதட்கு முன்னதாக ஏதோ ஒரு விடயம் இடம்பெற்று இருப்பதை விளக்க தான் Past Perfect உபயோகப்படும். இங்கு அப்படி இல்லை,

கீழுள்ள வசனத்தை பார்க்கவும்

When I arrived, the train had left.

என்பது ஒரு தொடரான வாக்கியமாகும்.  நான் செல்வதட்கு முன்னதாக புகையிரதம் புறப்பட்டு விட்டது .

ஆகவே Past Perfect தொடரான ஒரு சம்பவங்களை இறந்த காலத்தில் விளக்குவதாக இருக்க வேண்டும்.


Past Continuous

Past Continuous ஐ Past Progressive எனவும் அழைப்பார்கள்.  இதே நேரத்தில் இறந்த காலத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு சம்பவத்தை விபரிக்க Past Continuous பயன்படுகிறது.

Was /Were உடன் வினைச் சொல்லின் Present participle ( வினைச்சொல் + ing  ==>> உதாரணமாக :-
was/were help + ing => was/were helping
ஐ இணைத்து Past Continuous உருவாக்கப்படும்.

சில வசனங்கள் உதாரணமாக:-
  1. They were watching a movie at Satyam theatre
  2. The man was walking towards that junction
  • இறந்த காலத்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த  சம்பவம் ஒன்று ஏதாவது ஒரு செயலால் தடைபடும் வரை நடந்ததை விபரிக்க பயன்படும். 
உதாரணமாக :-
அவன் மேடையை விட்டு இறங்கும் வரை பார்வையாளர்கள் கை தட்டிக்கொண்டிருந்தார்கள் .

The audience was applauding until he fell off the stage.

அவள் வரும்போது நான் இரவு உணவு செய்து கொண்டிருந்தேன்.
I was making dinner when she arrived.
  • இறந்த காலத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மேட்கோள் காட்ட உதவும்.
Eg:-
At 6 o’clock, I was eating dinner.
6 மணி இருக்கும் போது  நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
  • இறந்த காலத்தில் இடம்பெற்ற வழக்கமான ஒரு செயலை விபரிக்க உதவும் 
Eg:
She was talking constantly in class in those days.
அந்த நாட்களில் அவள் வகுப்பில் தொடர்ந்து கதைத்துக்கொண்டே இருக்கிறாள்

Past Perfect Continuous 

Past Perfect Continuous ஐ Past Perfect Progressive எனவும் அழைக்கப்படும்.
இறந்த காலத்தில் தொடங்கி இறந்த காலத்திலேயே தொடர்ந்து ஒரு குறிப்பிடட நேரம் வரை இடம்பெற்ற ஒரு நிகழ்வை விபரிக்க இது பயன்படும்.

அதாவது , கிட்டத்தட்ட Past Perfect போல அமைந்தாலும் இறந்தகாலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்கு முன்னதாக நீண்ட நேரமாக அல்லது நீண்ட காலமாக நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்க உதவும்.

Past Perfect ல் இரண்டு சம்பவங்களும் இறந்த காலமாகவே அமையும்.  Past Perfect Continuous ல் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம், மற்றைய சம்பவம் நிகழும் போது நடந்துகொண்டிருந்த சம்பவமாக இருக்கும்.

Past Perfect Continuous பின்வரும் சமன்பாட்டின் மூலம் உருவாக்கப்படும்.

had been + the verb’s present participle (root + -ing)

கீழ்வரும் உதாரணங்களை பார்க்கவும்

When I arrived, Ram had been waiting for two hours.

I had been working for an NGO when I got the new job in an IT company
எனக்கு IT கம்பெனி ஒன்றில் வேலை கிடைக்கும் போது நான் ஒரு NGO ல் வேலை செய்துகொண்டிருந்தேன்.

When, for, since, and before போன்ற இணைக்கும் சொற்களை past perfect continuous உருவாக்கப் பயன்படுத்தப்படும்.

He had been started watching movies since 2016
She had been started working before she got married


அடுத்த பதிவில் நிகழ்காலம் தொடர்பான விடயங்களை பார்க்கலாம்.

வெள்ளி, 28 டிசம்பர், 2018

2018 வருட இறுதியில் பார்த்த "எழுமின்"

இந்த படம் வந்த போது விவேக் ஹீரோ என்று மட்டும் தெரியும்... ஒரு நாள் பார்க்க வேண்டும் என்று தள்ளி தள்ளி போய் இப்போது மாதங்கள் ஆகி ஒரிஜினல் காப்பி நெட்டில் வந்ததும் பார்த்தேன்.

படம் என்றால் அதில் பல வகை உண்டு.
சமூக கருத்தை கூறுவது - பொழுதுபோக்குக்காக மட்டும் பார்க்க கூடிய படம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த ரீதியில் இப்படம் ஒரு சமூக கருத்தை கூறும் படம் என்ற ரீதியில் சேர்த்துக் கொள்வேன்.
படத்தின் ஆரம்பத்திலேயே சிறுவர் துஷ்பிரயோகம் எனவும் முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு "Good Habits", "Bad Habits" சொல்லிக் கொடுத்தோம்; இப்போது "Good  Touch" "Bad Touch" சொல்லி கொடுக்க வேண்டும் என பட ஆரம்பம்.

கதையை பொறுத்தவரை ஓகே காரணம் படத்தின் நீளம் 1.45 மணி நேரம். சொல்ல வந்த கருத்து இதோ படத்தின் இறுதி நிமிடங்களில் வரும் இந்த படமே போதும்
கடினமான சூழ்நிலைகள் எப்பொழுதும் கற்றுக்கொடுக்கின்றன...
எந்த சூழ்நிலையிலும் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள்
மகன் இறந்த போது விவேக், தேவயானி நடிப்பு மிகவும் அபாரம். விவேக் பல குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் இதில் "அவன் மயக்கத்திலே தான் இருக்கான் போய் எழுப்புங்க டாக்டர்" என்பார்.... மனுஷன் அளவச்சிடார்.....

இந்தப் படம் பார்த்த பின்பு தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. இலங்கையில், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு 2 மாதங்களுக்கு முன் போன போது "Dance Fight" என ஒன்று இடம்பெற்றது. அதில் இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் இருந்து டான்ஸ் மேல passion இருக்கிற பல பேரை காணக்கூடியதாக இருந்தது.

அவர்களில் சிலரை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது, அவர்களில் பலர் வசதியான வீட்டு பிள்ளைகள் கூட இல்லை. எல்லாம் அவர்களின் சொந்த ஆர்வம் தான் அவர்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது என அறிந்து கொண்டேன். வாழ்க்கையில் எதோ ஒன்றை சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறியும், தன்னம்பிக்கையும்.......

அது இருக்கும் வரை எந்த சூழ்நிலையையும் உங்களால் சமாளிக்க கூடிய சக்தியை மனது உங்களுக்கு வழங்கும்..

ஆண்களுக்கு சரி சமமாக ஆடும் பெண்கள் பலர் அங்கு காணக் கூடியதாக இருந்தமை தான் நாம் வாழும் சமூகம் கூர்ப்படைகிறது என்பதை அறிய முடிகிறது.
ஆண் குழந்தைகளுக்கு பெண்மையின் உயர்வை சொல்லி வளருங்க... பெண்களுக்கு எல்லாம் தற்காப்பு கலையை சொல்லிக் கொடுங்கள்
படத்தின் இறுதியில் விவேக் சொல்லும் செய்தி.

வரப்போகும் வருடத்தை தன்னம்பிக்கையுடனும், உட்சாகத்துடன் வரவேற்போம்....

நாளை நமதே....

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடம்

வணக்கம் நண்பர்களே.. இன்றய தினம் நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு தகவலை உங்களோடு பகிர உள்ளேன், தனிமை சிலருக்கு இனிமை, சிலருக்கு கொடுமை. அப்படியாக தனிமை படுத்தப்படட ஒரு தீவு ஒன்று தெற்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அந்த தீவின் பெயர் "ட்ரிஸ்டன் த குன்ஹா". (Tristan da Cunha)
தென் ஆப்பிரிக்காவின், கேப் டவுன் இலிருந்து கிடடதட்ட 1400 மைல் தூரத்தில் அமைந்துள்ளது இந்த தீவு .

இந்த தீவில் கிடடத்தட்ட 300 மக்களே வசிக்கிறார்கள்.

இது மிகவும் மோசமான எரிமலை கொண்ட தீவாகும். 1961 கால கட்டத்தில் இங்கு எரிமலை குழம்பு வெடித்தது. அப்போது இங்கு மக்கள் வாழும் பிரதேசத்திட்க்கு அண்ணளவாக 10 மீட்டர் தொலைவில் தான் அந்த எரிமலை குழம்பு வெளியேறுவது நின்றதாம்.

மக்கள் அனைவரும் இதனால் இங்கிலாந்து போன்ற சில இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றாலும்; மீண்டும் தாம் வாழ்ந்த இடம் என்ற அன்பின் காரணமாக இங்கேயே வந்து விடடனராம். இன்றும் அந்த எரிமலை உயிர்ப்போடு தான் உள்ளது.
இங்கு வாள்பவர்களுக்கு பிரித்தானியாவின் குடியுரிமை வழங்கப்படுள்ளது முக்கியமான அம்சமாகும்.
இவர்களின் பொதுவான வாழ்க்கை முறையானது உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை.

மேலும், மாடுகளை பால் உற்பத்திக்கு பயன்படுத்துகிறார்கள். இங்கு நீண்ட காலமாக வாழும் ஒருவர் தாங்கள் எல்லோரும் அண்ணன் , தம்பி போல் பழகுவதும், அதிகமான நேரங்களில் வீடுகளின் கதவுகளையோ, ஜன்னல்களையோ திறந்து விட்டு தான் இருப்பதும் என சிரித்து கொண்டு கூறுகிறார்.

இங்கு ஒரு நெட் கஃபே உள்ளது. ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் அதுவும் அதிக செலவாகுமாம். 1 தபால் பெட்டி, விவசாய துறை அலுவலகம், காவல் நிலையம் ஒன்றும் என ஒரு சொர்கத்தை பூமியில் பெரும் அனுபவத்தை பெறலாம் இந்த தீவில்....

என் வாழ்நாளில் ஒரு தடவையாவது இங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

உங்கள் மனோ நிலையை கீழே கமெண்டில் பதிவிடுங்கள்...

ஞாயிறு, 26 நவம்பர், 2017

HTML கற்போம் பகுதி - 6

வணக்கம் நண்பர்களே...!! இன்று உங்களை இப் பதிவினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முந்தய பதிவான HTML கற்போம் பகுதி -5 ன்\ தொடர்ச்சியாக இன்று நாம் HTML ஐ பயன்படுத்தி போடோக்கள் (Photos) உள்ளீடு செய்வது என்பது பற்றி.

<img src="david.jpg" alt="David" />

david.jpg இவ் எழுத்துகள் காட்டி நிற்பது நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவின் இடம். பற்றி..

நீங்கள் கணனியில் ஒரு போட்டோவை எடுக்கப் போகிறீர்கள் என்றால்.

<img src="david.jpg" alt="David" />

இவ்வாறு type செய்து david.jpg இந்த சொல்லுக்குப் பதிலாக உங்கள் கணனியில் நீங்கள் உள்ளிடவிருக்கும் photo வின் அமைவிடத்தை இட வேண்டும்.

அமைவிடத்தை எப்படிக் காண வேண்டும் என்றால்...

Run ற்கு சென்று Browse என்பதை கொடுத்தல் உங்கள் கணனியிலிருக்கும் file கள் அனைத்தும் வரும். அப்போது நீங்கள் உள்ளிட விருக்கும் போட்டோவை click செய்தால் 

குறிப்பிட்ட அந்த இடத்தை copy செய்து  david.jpg என்ற இடத்திற்குப் பதிலாக போடுங்கள்.
இன்னொன்று 

<img src="david.jpg" alt="David" /> 

David என்பதகுப் பதிலாக நீங்கள் விரும்பிய சொல்லை இடலாம்... 

இப்போது coding 

<img src="C:\Users\Parathan\Desktop\download\mullaitivu\2013-05-19 11.38.05.jpg"alt="Parathan" />

இப்போது நீங்கள் உங்கள் கணனியிலிருக்கும் போட்டோவை 
HTML coding ஐ பயன்படுத்தி உள்ளிட தெரிந்திருப்பீர்கள்..


அடுத்து இணையத்திலிருக்கும் போட்டோவை HTML coding மூலம் உள்ளிட...

<img src="david.jpg" /> 

 அதேபோலத்தான் david.jpg என்ற சொல்லுக்குப் பதிலாக நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவின் URL ஐ இட வேண்டும். 

நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவில் Right click செய்து Copy Image URL ஐ click செய்து DAVID.jpg  என்பதற்குப் பதிலாக URL ஐ இட்டால் சரி.

Try பண்ணிப் பாருங்கள்.


அடுத்து போட்டோ ஒன்றுக்கு உங்கள் இணையத்தளத்தின் link ஐ கொடுப்பது எப்படி என்பதைப் பாப்போம்.

<a href="http://www.parathan20.blogspot.com">
<img src="logo.png" /></a>
என்னோட link க்குப் பதிலாக நீங்கள் கொடுக்க விரும்பும் link ஐ கொடுங்கள்
logo.png என்பதற்குப் பதிலாக போடோவின் URL ஐ கொடுங்கள்.

அவளவுதான்...


சில வேளைகளில் நீங்கள் codingஐ பயன்படுத்தி போட்டோ வை உள்ளீடு செய்த பின் அதன் உயரம் , அகலம் என்பன பெரிதாக இருக்கும். எனவே அதை குறைக்க வேண்டும் தானே....!!! 

குறைப்பதட்க்கு இது தான் coding..

<img src="logo.png" width="141px" height="32px" />

logo.png எனபத்ட்குப் பதில் போடோவின் URL ஐ உள்ளிடுங்கள்...

அடுத்து width என்பது அகலம் , height என்பது உயரம் உங்கள் விரும்பிய அளவுக்கு ஏற்றவாறு மாற்றினால் சரி..

இப்போது உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழுள்ள comment box ல் கருத்துகளை கூறவும்.


நன்றி..
பரதன்.

வெள்ளி, 17 நவம்பர், 2017

PDF file களை JPG, HTML ஆகவும் DOCX to DOC ஆக convert செய்வதற்கு..

வணக்கம் நண்பர்களே..! இன்று பலருக்குமாக உதவக்கூடிய file களை convert செய்யும் முறை பற்றி அறியத்தரப்போகிறேன்.

மென்பொருள்களை கணனியில் நிறுவி செய்வதற்குப் பதில் இவற்றை இணையத்திலே இவற்றை convert பண்ணி கொள்ளுங்கள்.

3 வகையான File conversion பற்றி சொல்ல இருக்கிறேன்

  1. PDF to JPG
  2. PDF to HTML
  3. DOCX to DOC 
1.PDF to JPG
பொதுவாக நாம் எழுத்து, படம் தொடர்பான file களை PDF வடிவில் வைத்திருப்போம். அந்த PDF file களை JPG என்ற image format க்கு மாற்றகூடிய வசதி உள்ளது.
இது முழுக்க முழுக்க free யானது.. 
உங்கள் convert செய்யவேண்டிய file ஐ upload செய்து convert என்ற பட்டனை click செய்யுங்கள்...
https://www.investintech.com/pdftojpg இது தான் அந்த தளம்..

2.PDF to HTML
நீங்கள் ஒரு PDF வடிவில் ஒரு file ஐ வைத்திருக்கிறீர்கள். அதனை இணையத்தில் அப்படியே காட்சிபடுத்த வேண்டுமென்றால் உங்களுக்கு HTML/CSS ல் சிறந்த விளக்கம் ஒன்று வேண்டும். அல்லது PDF file ஐ upload செய்து விட்டு அதை டவுன்லோட் செய்வதற்கான ஒரு லிங்க் கொடுக்க வேண்டும்..

இப்படி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் PDF file ஐ HTML file ஆக மாற்ற 

இங்கு சென்று file ஐ upload செய்து convert செய்து மீண்டும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

3.DOCX to DOC
நீங்கள் MS OFFICE ல் பழைய வேர்சன் பவனயாலராயின் அதனை புதிய OFFICE package க்கு ஏற்றால் போல DOCX file களை doc file format க்கு மாற்ற 
http://www.doc.investintech.com/ என்ற இணையத்திற்கு சென்று 
convert செய்ய வேண்டிய file ஐ click செய்து e-mail address ஐ கொடுக்கவும்.
பின் convert செய்து send என்ற பட்டனை click செய்தால் உங்கள் மின்னஞ்சலுக்கு டவுன்லோட் பண்ணுவதற்கான லிங்க் கிடைக்கும்..

அவளவு தான்..
பதிவு பயனுள்ளதாக இருந்ததா...??

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

HTML கற்போம் பகுதி-11

வணக்கம் நண்பர்களே... இறுதியாக நான்கு வருடங்களுக்கு முதல் பகுதி-10 எழுதியிருந்தேன்,.. 2014 ஆம் ஆண்டு HTML 5  வெளிவந்தது. அதை பற்றி தொடர்ந்து எழுதுவதற்கான நேரம் கூடவில்லை.. இப்போது
இத் தொடரை எழுதி முடிக்கலாமென நினைக்கிறன்.. இனி ஒவ்வொரு வாரமும் இத் தொடரை எதிர்பார்க்கலாம்.

பழைய HTML க்கும் HTML 5 க்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. கோடிங் எழுத ஆரம்பிக்கும் போது பழைய வெர்சனில் <html> என சாதரணமாக ஆரம்பித்திருப்போம் இங்கு <!DOCTYPE html> என தொடங்க போகிறோம்... அவளவே...

மற்றபடி ஒரு சில tag கள் புதிதாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக இனி வரும் தொடரில் பாப்போம்.


HTML 5 ல் comment tag என ஒன்று உள்ளது. . ஒரு html coding எழுதுகிறீர்கள் என்றால் அதை ஒருவர் பார்க்கும் போது html திறமை உள்ளவராயின் tag களை வைத்து இனம் பிரிப்பார்.
html தெரியாதவர் என்றால் இந்த code எதற்கு அந்த code எதற்கு என குழம்பி போய் இருப்பார். ஆகவே அந்த பிரச்சனையை இல்லாமல் இருக்க html டிசைன் பண்ணும் ஒருவரால் கீழ்வரும் code ஆனது இந்த டிசைன் காக எழுதியுள்ளேன் என பார்ப்பவர் புரிந்து கொள்ள எழுதப்படுவது.

இது browse பண்ணும் போது வராது..

<!-- Write your comments here -->

Write your comments here என்ற இடத்தில் நீங்கள் எதனையும் எழுதலாம் அது உங்கள் இனைய பக்கத்தில் வராது..

<!-- Do not display this at the moment
<img border="0" src="pic_mountain.jpg" alt="Mountain">
-->

இங்கு நீங்க imag ஒன்றை உள் புகுத்த img tag ல எழுதி இருக்கீங்க ஆனால் comment tag குள் எழுதியதால் அது உங்கள் webpage ல் display ஆகாது...

Hello World


Hello World


<h1 style="border: 2px
solid Tomato;">Hello World</h1>
<h1 style="border: 2px
solid Violet;">Hello World</h1>


இது ஒரு வகை inline css code.
ஒரே வரியில் டிசைன் களை code ஆக்குவதாலேயே இது css வகைக்குள் அடங்குகிறது.  இங்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த வகையில் மாற்றங்களை செய்யலாம். உதாரணமாக border ன் தடிப்பு மட்டும் நிறங்களை மாற்ற முடியும்.

இங்கு Solid என்று இருப்பது அந்த தடிப்பு எப்படி அமைய வேண்டும் என்பதாகும்.
Solid ஐ dotted என மாற்றினால் கீழுள்ளவாறு தோன்றும்...

Hello World


இப்போது புரிகிறதா...???

இன்றைய பதிவுவை இத்துடன் முடித்து கொள்கிறேன்... தொடர்ந்து இணைந்திருங்கள் இன்னும் பல பதிவுகள் காத்திருகின்றன...